» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : நெல்லை சரக டிஐஜி ஆய்வு!
வியாழன் 16, அக்டோபர் 2025 9:28:39 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)

மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு
திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST)

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:41:52 AM (IST)








