» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

வியாழன் 16, அக்டோபர் 2025 5:18:57 PM (IST)

தூத்துக்குடியில் கல்லறைத் தோட்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.  

தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் பாதாளமுத்து மகன் சுடலைமுத்து (18). இவர் கடந்த ஆறு மாதமாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம். இநத நிலையில், இன்று மதியம் அவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வருவதற்காக சுவர் ஏறி குதிக்க முயன்றுள்ளார்.

அப்போது அருகில் இருந்த மின்வயர் மீது அவரது உடல் உரசியதில் மின்சாரம்  தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory