» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுதேசி கப்பல் தினம் : வ.உ.சி. சிலைக்கு இந்து முன்னணி மரியாதை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:53:52 PM (IST)

தூத்துக்குடியில் சுதேசி கப்பல் இயக்கிய தினத்தை முன்னிட்டு இந்து முன்னணியினர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக வ.உ.சிதம்பரம் பிள்ளை 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். இந்து முன்னணியின் கிளை அமைப்பான இந்து வியாபாரிகள் நலச்சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறது.
இதையொட்டி இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்பு அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மாநில இந்து வியாபாரிகள் சங்கத் தலைவரும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர மாவட்ட செயலாளர் சரவணகுமார், மேற்கு மண்டல துணைத் தலைவர் சுடலைமணி, கிழக்கு மண்டல செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)

மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு
திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST)









வெங்கடேஷ்Oct 17, 2025 - 11:43:31 AM | Posted IP 172.7*****