» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நவதிருப்பதி கோவில்களில் புரட்டாசி கடைசி சனி வழிபாடு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:37:49 AM (IST)
ரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதற்காக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையும், விசுவ ரூப தரிசனமும் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
இந்த மாதம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் சத்தியநாராயணா அலங்காரத்திலும், 2-வது சனிக்கிழமையில் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், 3-வது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதுபோல் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் நேற்று காலை 10.30 மணியளவில் சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகள் நடந்தது. இரவில் ஆலய வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் திரளான பக்தர்கள் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். அதை தொடர்ந்து மழை பெய்து விவசாயங்கள் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்
திங்கள் 17, நவம்பர் 2025 4:10:08 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்
திங்கள் 17, நவம்பர் 2025 3:39:46 PM (IST)

தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!
திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)

அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)








