» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:24:59 AM (IST)

தூத்துக்குடியில் ரோந்து சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சந்தனராஜ் என்ற பேண்டி (22). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, சுந்தர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் சந்தனராஜ் அரிவாளுடன் பதுங்கியிருந்தாராம்.

அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றாராம். இருப்பினும் போலீசார் சுற்றி வளைத்து, அவரை கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory