» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!

செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)



சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜாக்கி மூலம் ரேனியஸ் கன்வென்சன் கூட்டம் மேடையை 3 அடி உயர்த்தி அமைக்கும் பணி இன்று தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலய வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரேனியஸ் கன்வென்சன் கூட்ட மேடை உள்ளது. தற்போது ஆலயத்தை சுற்றியுள்ள சாலை உயர்ந்து போனதால் மழை காலத்தில் மழை நீர் மேடை சூழ்ந்து பாதிக்கும் நிலை வந்துள்ளது. அதனை இடித்து புதியதாக கட்டாமல் ஜாக்கி மூலம் அதன் அடிப்பகுதியில் 3 அடி உ.யர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி மேடை அடிப்பாகத்தை சுற்றி ஜாக்கி அமைத்து உயர்த்தி அமைக்கும் பணியை சேகர குருவானவர் டேவிட் ஞானையா ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் திருமண்டல முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் குணசீலன், கிருபாகரன், சேகர செயலாளர் வக்கீல் தியோனிஸ் சசிமார்சன், பொருளாளர் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணியில் 20க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory