» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்

ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

விளாத்திகுளத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜ் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (65), இவரது மனைவி முனீஸ்வரி (63). இருவரும் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த ஒரு லாரி பைக்கை கடந்து சென்ற போது காற்றின் வேகமாக நிலை தடுமாறிய குருசாமி தனது மனைவியுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் லாரியின் பின் டயர் ஏறி இறங்கியதில் முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குருசாமி பலத்த காயம் அடைந்தார். அவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி, ஆனந்தா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் முத்து மாரீஸ்வரன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory