» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அ.வரதராஜன், கனிமொழி எம்பிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 12 மற்றும் 14 ஆகிய தினங்களில் பெய்த பெரு மழைக்கு மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விவசாயிகள் கடும் நஸ்டத்திற்கு உள்ளாளர்கள். நவம்பர் மாதம் பெஞ்சல் புயலுக்கு பாதிக்கப்பட்ட வட மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய் துறையால்  கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் நிவாரணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை. 59 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து வருகிறார். அடுத்த பருவத்திற்கு கோடை உழவு கூட செய்ய முடியாமல் மிகவும் கஸ்டப்படுகின்றனர். நிவாரணம் பெற்றுத்தர கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

சண்முகவேல் விவசாயி மகன்Jun 14, 2025 - 02:00:19 PM | Posted IP 162.1*****

பயிர் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போது கொடுத்திருப்பார்கள் அதற்கு இந்த அரசு வழங்குவதற்கு வாய்ப்பில்லை ராஜா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors





Thoothukudi Business Directory