» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!

திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்ன்றி உயரிழந்தார். 

நெல்லை கோவைகுளத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71), இவர் அவரது உறவினர் முத்துக்குமார் என்பவரை பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு கடந்த மே 5ஆம் தேதி வந்து பார்த்து விட்டு, 6ஆம்தேதி அவரது பேரன் இசக்கிராஜா ஓட்டி வந்த பைக்கில் சாத்தான்குளம் பன்னம்பாறை, செட்டிக்குளம் வழியாக நெல்லை சென்றனர்.

செட்டிக்குளம் வேகதடை பகுதியில் வரும் போது திடீரென எதிர்பாராத விதமாக முத்துலட்சுமி பைக்கில் தவறிவிழுந்தாராம். இதில் காயமடைந்த முத்துலட்சுமியை நெல்லை மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்து போனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory