» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!

ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)

தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை "தூத்துக்குடி குரூஸ் பார்னாந்து சிலை அருகே பொருதப்பட்டுள்ள போக்கு வரத்து சிக்னல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இப்பகுதி வியாபார ஸ்தலமாக இருப்பதலும் பிரதான சாலையை இணைப்பதாலும் போக்குவரத்து நெருக்கடிக்கடி உள்ள பகுதியாகும். விடுமுறை நாளில் இது மேலும் அதிகரிக்கும். சமீபத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் தனியாக காவலர் மூலம் கையாள்வது மிகச் சிரமமாகும். 

மேலும் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு பழக்கப்பட்டுளதால் மிகுந்த சிரமத்துள்ளாகியுள்ளனர். ஆகவே சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இதில் தலையிட்டு விரைந்து போக்குவரத்து சிக்னலை சரி செய்யுமாறும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory