» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)

தூத்துக்குடியில் அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்த நிலையில் திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். 

அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்றவர்கள் குடைபிடித்து சென்றனர். குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory