» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை!
சனி 26, ஏப்ரல் 2025 9:13:57 AM (IST)
தூத்துக்குடியில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆபரேசன் சஜாக் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று மாதம் தோறும் ஆபரேசன் சஜாக் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிது. அதன்படி நேற்று ஆபரேசன் சஜாக் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலோர காவல்படையினர், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கடலில் ரோந்து சென்றனர். அப்போது, படகுகளில் சந்தேகப்படும் படியாக யாரும் உள்ளார்களா, படகில் உள்ளவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளிலும் சோதனை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

காணாமல் போன தெருவை கண்டுபிடிக்க வேண்டும் : ஆட்சியரிடம் ஜிபி முத்து கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 5:11:37 PM (IST)

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)
