» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துாத்துக்குடி மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த செந்துார்பாண்டி மகன் தங்கராஜ் (22), மீனவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல அதிகாலை, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த மரிய சூசை ஸ்டீபன் மகன் ஆகாஷ் சிலுவை (25), மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் மகன் மரிய தாமஸ் யுனோ (25), அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் மைக்கேல் ஜோதிஷ் (20) ஆகிய 3 பேர் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)
