» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!

வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

துாத்துக்குடி மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த செந்துார்பாண்டி மகன் தங்கராஜ் (22), மீனவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல அதிகாலை, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த மரிய சூசை ஸ்டீபன் மகன் ஆகாஷ் சிலுவை (25), மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் மகன் மரிய தாமஸ் யுனோ (25), அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் மைக்கேல் ஜோதிஷ் (20) ஆகிய 3 பேர் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory