» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
தூத்துக்குடியில் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சகாய குமார் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த இவர் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில், மரடோனா நேற்று முன்தினம் இரவில் தனது நண்பரான கிளிட்டஸ் (28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆலன் என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். கிளிட்டஸ் உள்ளிட்டவர்கள் ஆலனை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆலன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மரடோனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற கிளிட்டசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த மரடோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் அப்பு என்ற மதன்குமார் (38), அலங்கார தட்டைச் சேர்ந்த அந்தோணி மகன் ஸ்டீபன் (20), லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த ராபின்சன் மகன் ரெக்ஸன் (20), திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ஆலன் (31) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதில், பிரபல ரவுடியான மதன்குமார் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
சட்டம் தெரிந்தவன்Apr 21, 2025 - 12:19:56 PM | Posted IP 172.7*****
பழைய குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுக்காமல் இருப்பதே பல கொலைக்கு காரணம். இனி கொலைக்குற்றவாளிகளை தூக்குல போட்டால்தான் தூத்துக்குடி அமைதி பூங்காவாக மாறும். இனி ஆயுள்தண்டனை கொடுக்கும் வழக்கறிஞர்களை செருப்பால் அடிக்க வேண்டும். தூக்குத்தண்டனை தான் சரியான தீர்வு .
மேலும் தொடரும் செய்திகள்

காணாமல் போன தெருவை கண்டுபிடிக்க வேண்டும் : ஆட்சியரிடம் ஜிபி முத்து கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 5:11:37 PM (IST)

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

AajuApr 22, 2025 - 10:36:52 PM | Posted IP 162.1*****