» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது

திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சகாய குமார் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த இவர் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில், மரடோனா நேற்று முன்தினம் இரவில் தனது நண்பரான கிளிட்டஸ் (28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். 

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆலன் என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். கிளிட்டஸ் உள்ளிட்டவர்கள் ஆலனை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆலன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மரடோனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற கிளிட்டசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த மரடோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் அப்பு என்ற மதன்குமார் (38), அலங்கார தட்டைச் சேர்ந்த அந்தோணி மகன் ஸ்டீபன் (20), லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த ராபின்சன் மகன் ரெக்ஸன் (20), திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ஆலன் (31) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதில், பிரபல ரவுடியான மதன்குமார் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

AajuApr 22, 2025 - 10:36:52 PM | Posted IP 162.1*****

Neengal solvathu murttrulm unmai

சட்டம் தெரிந்தவன்Apr 21, 2025 - 12:19:56 PM | Posted IP 172.7*****

பழைய குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுக்காமல் இருப்பதே பல கொலைக்கு காரணம். இனி கொலைக்குற்றவாளிகளை தூக்குல போட்டால்தான் தூத்துக்குடி அமைதி பூங்காவாக மாறும். இனி ஆயுள்தண்டனை கொடுக்கும் வழக்கறிஞர்களை செருப்பால் அடிக்க வேண்டும். தூக்குத்தண்டனை தான் சரியான தீர்வு .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory