» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)



திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டிகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, முருகனை தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் தூண்டிகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory