» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் 23.05.2025 முதல் தொடங்குகிறது. 

இந்த மே, ஜூன் 2025 தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு கட்டணமாக கூடுதலாக ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகுதி மற்றும் பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். 

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, 2-ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, பதிவு கட்டணம், சேவைகட்டணம் ரூ.1, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். ஆகையால் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory