» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

செவ்வாய் 25, மார்ச் 2025 8:25:14 AM (IST)

தூத்துக்குடி பகுதியில் இருவேறு இடங்களில் 2½  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது போலீசார் செய்தனர்.

தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் சிப்காட் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள டவர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம்(19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை தேரிச் சாலையில் புதுக்கோட்டை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்த தெர்மல் நகரைச்சேர்ந்த ரீகன்(20), மகேந்திரன்(20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory