» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது : பைக் பறிமுதல்!!
சனி 22, மார்ச் 2025 3:27:45 PM (IST)
நாசரேத்தில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியை சத்தம் போடவே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து பைக்கில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்று விட்டான். இதுகுறித்து பெர்சியா நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று மாலை நாசரேத் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் கங்கைய நாத பாண்டியன் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஐசக் மகாராஜா மற்றும் காவலர் ஜெகநாதன் போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பைக்கை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அவர் அணியாபரநல்லூர் வேத கோயில் தெருவைச் சேர்ந்த ராஜபால் மகன் அசோக் (37) என்பதும் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நாசரேத் போலீசார் அவரை கைது செய்து, அவர் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
