» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் அகற்றம் : மின்வாரியம் அதிரடி!
சனி 22, மார்ச் 2025 3:08:57 PM (IST)

நாசரேத்தில் கட்டுக் கம்பியால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய மின் கம்பம் நாட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் 2வது தெருவான களஞ்சியம் தெரு பிரதான சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் இருந்தது. இப் பகுதியில் பிரசித்தி பெற்ற யோவான் பேராலயம், தபால் நிலையம், மெட்ரிகுலேஷன் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இந்த சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், சிறு வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த ஆபத்தான மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி நாசரேத் மின்வாரியம் உடனடியாக மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதிரடியாக பழைய கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நாட்டினர். புதிய மின் கம்பம் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
