» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

தூத்துக்குடியில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியர் எழுத்தாளர் நெய்தல் யூ. அண்டோவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவுக்கு அவர் பணி செய்கிற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. சவேரியானா இல்ல அதிபர் ஆரோக்கியசாமி, பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர் அமல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடினார். வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் எ.பி.சி.வி. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், நெய்தல் அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி என்ற முப்பெரும் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்ணின் வரலாற்றைத் துணிவுடன் பதிவு செய்யும் எழுத்துப் பணியைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.
விழாவில் உதவித் தலைமையாசிரியர்கள் வளன், ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆசிரியரைப் பாராட்டினர். முன்னதாக, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்றார். நிறைவாக ஆங்கில வழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் டைசன் நன்றியுரை கூறினார். நிகழ்வை ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் யூ. அண்டோ ஏற்புரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
