» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)
தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தீ விபத்தின்போது பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வந்தன. இதன்மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி இரவு அனல்மின்நிலையத்தில் 1, 2-வது மின்சார உற்பத்தி எந்திரத்தின் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மின்சார ஒயரில் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் தென்மண்டல அளவிலான தீயணைப்பு படையினர் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 18 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 எந்திரங்களும் பெரிதும் சேதம் அடைந்தன. 3-வது மின்உற்பத்தி எந்திரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 3 மின்உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்வதற்கும், சேத மதிப்பு கணக்கிடுவதற்கும் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கலில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தலைமை பொறியாளர் கனிகண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் நேற்று காலை தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது தீப்பற்றி எரிந்த மின்உற்பத்தி எந்திரங்களை பார்வையிட்டனர்.
பின்னர் தீ விபத்தின் போது, பணியில் இருந்த பொறியாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோன்று தீயணைப்பு படையினரிடமும் முழுமையாக விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு அனல் மின்நிலைய தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். முழுமையாக ஆய்வுக்கு பிறகு சேத மதிப்பு உள்ளிட்டவை குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







