» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!
சனி 22, மார்ச் 2025 8:17:25 AM (IST)

தூத்துக்குடியில் அதிகாலை 2 மணி முதல் கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக நல்ல வெயில் அடித்து வந்தது இதனால் பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி முதல் தூத்துக்குடி இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் பிரைன் நகர் முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம், புதுக்கோட்டை , முத்தையாபுரம், தாளமுத்து நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் தற்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
