» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா

சனி 22, மார்ச் 2025 8:13:30 AM (IST)



தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 வது ஆண்டு விழா ஐபிஎம் மினிஸ்ட்ரி பிஷப் ஏ. ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. விற்பனை மேலாளர் அஜித் விருந்தினர்களை வரவேற்றார். நிர்வாக பங்குதாரர் விக்டர் நிறுவனம் 30 வருடங்கள் கடந்து வந்த பாதையை கூறினார். பொது மேலாளர் ரமேஷ் விற்பனை மற்றும் சேவை பற்றி விளக்கினார். பிஷப் ஏ. ஸ்டீபன் சிறப்புரை ஆற்றி ஆசி வழங்கினார். 

வாடிக்கையாளர்கள், நண்பர்கள், ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி, ஜெயண்ட்ஸ் குரூப் ஆஃப் டூட்டிகோரின், வீ.கேன் மற்றும் அறம் சார் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பங்குதாரர் பிரின்ஸ் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். சர்வீஸ் மேலாளர் ஜெனிபர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி தலைவர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பணியாளர்கள் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory