» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மேலக்கரந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதால் மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக கடந்த 2023 - 2024-ம் ஆண்டு பாதிப்படைந்து பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டதில் பருத்தி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் தற்போது வரை பயிர் காப்பீடு விடுவிக்கப்படவில்லை என்பதால் அதனையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வெம்பூரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறை முழுமையாக கைவிட வேண்டும் என்றும்,
மேலக்கரந்தை காற்றாலை உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கில் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும், விளைபொருளுக்கான மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, வத்தல் போன்ற பயிர்களுக்கு அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும்,
தெலுங்கானா மாநிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)
