» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!

திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் அருகே வேலையில்லாத விரக்தியில் பூசாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பைச் சோ்ந்த வேலுபிள்ளை மகன் ஐயப்ப சண்முகம் (48). கோவில் பூசாரியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஐயப்பசண்முகம் வேலையில்லாததால் விரக்தியில் இருந்தாராம்.

கடந்த பிப். 14ஆம் தேதி இவரது மனைவி திருச்செந்தூரில் உள்ள கணினிப் பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, ஐயப்ப சண்முகம் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம்.தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீசார் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory