» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:57:48 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன், ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில், குழந்தைகள் பொம்மை துப்பாக்கிளில் வைத்து வெடிக்கும் ரோல் வெடிகள் இருப்பதும், இதனை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெடிகளை போலீசார் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் ஆகும். இது தொடர்பாக தப்பியோடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)
