» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு!
ஞாயிறு 19, ஜனவரி 2025 6:09:57 PM (IST)
கோவில்பட்டியில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுகிராமம் பகுதியில் கடந்த 15.01.2025 அன்று இரவு பொங்கல் கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 14,16 மற்றும் 17 வயதுடைய 9 சிறுவர்கள் மற்றும் கோவில்பட்டி பழைய அப்பனேரி பகுதியைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி மகன் சூர்யா (23) ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பாடலை ஒலிக்கச் சொல்லி கலை நிகழ்ச்சி விழாவில் தகராறு செய்துள்ளனர்.
இதனை கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த வேலவன் மகன் கோமதி சங்கர் (24) மற்றும் விழா அமைப்பாளர்கள் சேர்ந்து அவர்களை சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மேற்படி சிறுவர்கள் மற்றும் சூர்யா பின்னர் மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அங்கு வந்து கோமதி சங்கரிடம் தகராறு செய்ததுடன் பெட்ரோல் திரியை பற்ற வைத்து அதை மேடை அருகே வீசியுள்ளனர். இதில் ரூபாய் 500 மதிப்புள்ள மேடை அலங்கார பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து கோமதிசங்கர் அளித்த புகாரியின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி கோமதிசங்கரை மிரட்டியது மற்றும் பெட்ரோல் பாட்டிலை பற்ற வைத்து மேடை அருகே வீசி அலங்காரப் பொருட்களை சேதப்படுத்திய 10 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து அதில் 7 சிறுவர்களை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சூர்யாவை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புகார்தரரான கோமதிசங்கருக்கும் எதிரிகளுக்கும் முன்பின் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் எந்தப் பகையோ முன்விரோதமோ இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்தியை பிரபல தினசரி பத்திரிக்கை ஒன்று மேற்படி வழக்கின் உண்மை தன்மை தெரியாமல் "வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 9 பேர் கைது என பத்திரிக்கை செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் தூத்துகுடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST)

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:36:30 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:08:54 AM (IST)

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:41:39 AM (IST)
