» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழப்பு!

ஞாயிறு 19, ஜனவரி 2025 11:59:31 AM (IST)

தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கணேசன் (43) கூலி தொழிலாளி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். 

இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் படுக்கையில் மயங்கி கிடந்தாராம். அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory