» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவன், மனைவியிடம் செல்போன், பைக் பறிப்பு : இளம் சிறார் உட்பட 5 பேர் கைது

ஞாயிறு 19, ஜனவரி 2025 11:49:19 AM (IST)

தூத்துக்குடியில் குளத்தில் குளிக்கச்சென்ற கணவன், மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பைக்கை பறித்துச் சென்ற இளம் சிறார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி பிரைன்ட்நகர் 7வது தெருவில் வசிப்பவர் கல்யாண சுந்தரம். இவரது மனைவி முத்துமாரி (33). கணவன், மனைவி இருவரும் கோரம்பள்ளம் அருகே உள்ள காலங்கரை நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்றனர். காலங்கரை கரை ஓரத்தில் இருவரும் நின்று கொண்டிருந்தபோது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கணவன் மனைவி இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் அவரது மோட்டார் பைக்கையும் பறித்து சென்று விட்டனர்.
 
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி கணேசன் காலனி சேர்ந்த ராஜ் மகன் சிவராம் (23) பிரைன்ட்நகரை சேர்ந்த மணிமகன் செல்வ பார்த்திபன் (23), 12வது தெருவைச்சேர்ந்த மாடசாமி மகன் சக்திபெருமாள் (19), முனியசாமி நகரைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (25) மற்றும் 17 வயது இளம் சிறார் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory