» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:35:52 AM (IST)
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், 8-வது தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (38). கூலி தொழிலாளி. இவர் தூத்துக்குடி கருப்பட்டி ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (47), இனிகோ நகரைச் சேர்ந்த காட்வின் (25), ஜார்ஜ் (24), தாளமுத்துநகர், அலங்காரதட்டைச் சேர்ந்த ஜெயகுமார் (35) ஆகிய 4 பேரும் மதுகுடிக்க பணம் கேட்டனர்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, 4 பேரும் அவரை அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மந்திரமூர்த்தி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமார், காட்வின், ஜார்ஜ், ஜெயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
