» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:35:52 AM (IST)
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், 8-வது தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (38). கூலி தொழிலாளி. இவர் தூத்துக்குடி கருப்பட்டி ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (47), இனிகோ நகரைச் சேர்ந்த காட்வின் (25), ஜார்ஜ் (24), தாளமுத்துநகர், அலங்காரதட்டைச் சேர்ந்த ஜெயகுமார் (35) ஆகிய 4 பேரும் மதுகுடிக்க பணம் கேட்டனர்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, 4 பேரும் அவரை அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மந்திரமூர்த்தி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமார், காட்வின், ஜார்ஜ், ஜெயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








