» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோட்டார் பைக் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 18, ஜனவரி 2025 9:02:10 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை (55). கூலிதொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கால்வாய் கிராமத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பொன்னங்குறிச்சி பகுதியில் சென்றபோது பின்னால் தென்காசியை சேர்ந்த பால்சாமி மகன் வேல்சாமி (40) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதமாக சுடலை மீது பயங்கரமாக மோதியது.
இதில் சுடலை தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து வந்தனர். சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
