» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது!

சனி 18, ஜனவரி 2025 8:35:29 AM (IST)

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது கிராமம் நாராயண குரு திடலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிக்கு, அங்கு வந்த இளைஞர்கள் இடையூறு செய்தார்களாம். அவர்களை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோமதி சங்கர் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த ஹரி ஆகியோர் கண்டித்ததற்கு அந்த இளஞ்சிறார்கள், அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்து சென்றார்களாம்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மேடையை அகற்றுப்பணி நடைபெற்ற போது அங்கு வந்த இளஞ்சிறார்கள் உள்பட 8 பேர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோமதி சங்கர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 7 இளஞ்சிறார்களை பிடித்து சிறுவர் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த இளையரசனேந்தல், அப்பனேரியைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி மகன் சூரிய குமார் (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory