» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடலில் மிதந்த மீனவர் உடல் மீட்பு : மரைன் போலீஸ் விசாரணை!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:44:19 AM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் மிதந்த மீனவர் உடலை மீட்டு மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மட்டக்கடை, நாட்டுக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் சூசையா வி ராயர் மகன்  நிக்சன் வில்லவராயர்(54).  இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விசைப்படகில் வேலை பார்த்து வருகிறார், கடந்த 05.12.24ம் தேதி கடலுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இன்று மீன்பிடி துறைமுகம் போட் யார்டு அருகில் அழுகிய நிலையில் அவரது உடல் மிதந்தது. இதுகுறித்து தகவலின் பேரில்  மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறை மூலம் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory