» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

செவ்வாய் 12, நவம்பர் 2024 4:53:46 PM (IST)



நாகர்கோவில் அருகே, தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசரி தெருவைச் சேர்ந்தவர் ஹெரால்டு அருள்குமார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் வருமானவரித் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory