» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்: போலீஸ் விசாரணை!

சனி 9, நவம்பர் 2024 12:02:15 PM (IST)

தூத்துக்குடி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது : தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சொக்கலிங்கம் (41). இவர் மத்திய பிரதேசத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory