» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி வழங்கல்!

சனி 9, நவம்பர் 2024 11:43:57 AM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கான நவீன கருவி அஸ்வினி சீ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் பிரிவில் மாதம் தோறும் 2,500 வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர், 100 முதல் 200 கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களுக்கு அதிநவீன முறையில் கையில் இல்லாமல் சிறிய துளை போட்டு லேசர் அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவும் ஃபாகோ மெஷின் ஹேண்ட்பீஸ் கருவியினை அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இக்கருவியினை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, துணை உறைவிட மருத்துவர் கரோலின், மருத்துவர்கள் ஃபெபின், குமரன் மற்றும் அஸ்வின் அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நவீன கருவியின் மூலம் தனியார் மருத்துவமனைகளில்  செய்யப்படும் அதிநவீன லேசர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஈடாக அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவிலும் செய்யப்படும். இதனால் கண்புரை நோயாளிகள் பலன் பெறுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory