» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை!

திங்கள் 4, நவம்பர் 2024 10:20:21 AM (IST)

தூத்துக்குடி நகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று காலை 6.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 33 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூர் 27மிமீ, தூத்துக்குடியில் 8.10 மிமீ, எட்டயபுரம் 5.10மிமீ, ஸ்ரீவைகுண்டம் 4.10மிமீ, சாத்தான்குளம் 2.20 மிமீ, கழுகுமலை 2 மிமீ, என மாவட்டத்தில் மொத்தம் 81.5 மிமீ மழை பெய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory