» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போலீசாருக்கு மிரட்டல்: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திங்கள் 4, நவம்பர் 2024 8:30:21 AM (IST)

தூத்துக்குடியில் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளம்சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மில்லர்புரம் மையவாடி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டினராம்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற தியோராஜ் (24), இரு இளம்சிறார்கள் என்பதும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

naan thaanNov 6, 2024 - 05:02:53 PM | Posted IP 162.1*****

millarpuram maiyavadi kum AR camp kum periya thooram illai, irunthum kaikalil kathiyudan police aye miratura team iruku na pothumakkal ena seivargal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory