» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறவை காவடி எடுத்து குலசை பக்தர் வழிபாடு!

ஞாயிறு 6, அக்டோபர் 2024 5:18:36 PM (IST)



குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதுடன் அம்மனின் அருள் கிடைக்க வேண்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி முத்தாரம்மன் ஆலய தசரா குழு சார்பில் சார்பில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்

இதில் சிறப்பாக முத்தாரம்மன் ஆலய தசரா குழுவைச் சேர்ந்த பக்தர் கணேசன் என்பவர் முத்தாரம்மனுக்கு நேர்த்தி கடனாக தனது உடலில் பல பகுதிகளில் அலகு குத்தி  பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்றார், இந்த பறவை காவடி காவடி தூத்துக்குடி சந்தன மாரியம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைக்கு பின் துவங்கி நகரின் பல்வேறு பகுதியில் வழியாக தாள முத்துநகர் முத்தாரம்மன் ஆலயத்தை அடைந்தது. இந்த பறவை காவடி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory