» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகை கடை ஊழியர் திடீர் மாயம்.: போலீசார் விசாரணை

வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:08:21 AM (IST)

சாத்தான்குளத்தில் நகை கடை ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி சாலையைச் சேர்ந்தவர் ப. மணிகண்டராஜா (44). இவருக்கு ராதா என்ற மனைவியும், மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் பேய்க்குளத்தில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாள்களாக உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி மாலை 5 மணிக்கு செல்போனை வீட்டில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா (38) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory