» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை கடை ஊழியர் திடீர் மாயம்.: போலீசார் விசாரணை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:08:21 AM (IST)
சாத்தான்குளத்தில் நகை கடை ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி சாலையைச் சேர்ந்தவர் ப. மணிகண்டராஜா (44). இவருக்கு ராதா என்ற மனைவியும், மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் பேய்க்குளத்தில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாள்களாக உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி மாலை 5 மணிக்கு செல்போனை வீட்டில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா (38) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)
