» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 12, செப்டம்பர் 2024 11:13:16 AM (IST)

தூத்துக்குடியில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவரது மகள் முருகேஸ்வரி (27), பி.காம் பட்டதாரியான இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிற 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்ததாம். இதற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவரது தந்தை செல்லையா கஷ்டப்பட்டு வந்ததாராம். இதனால் மன வேதனையடைந்த முருகேஸ்வரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory