» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் திடீர் மாற்றம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 4:35:13 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக எஸ்.ஞானசேகரன் நியமிக்கப்ட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த எம்.கார்த்திக், திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக தஞ்சாவூர் இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஞானசேகரன் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் பழனிகுமார், குமரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 5 கோவில்களில் இணை ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
