» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 21, ஜூலை 2024 8:01:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சங்கரப்பேரி விளக்கில் இருந்து பெரிய பள்ளம் ஓடையில் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் புறவழிச் சாலையில் இருந்து இந்த ஓடை வழியாக மழை நீரானது தருவைக்குளம் சாலை வழியாக கடலுக்குள் செல்கிறது.
அதனைத் தொடர்ந்து மடத்தூர் பகுதியில் அமைந்துள்ள குளத்தையும் புறவழிச் சாலையில் உள்ள உப்பாற்று ஓடையையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகரத்துக்குள் மழை நீர் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஓடைகளை செம்மைப்படுத்தி அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை மேயர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், இசக்கிராஜா, திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)

ஏரியா காரன்Jul 21, 2024 - 09:36:56 PM | Posted IP 162.1*****