» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை பாலிஷ் போடும் கடையில் நகைகள் திருட்டு : மேற்கு வங்க இளைஞர் கைது
திங்கள் 15, ஜூலை 2024 8:12:36 AM (IST)
தூத்துக்குடியில் உள்ள நகை பாலிஷ் போடும் கடையில் 200 கிராம் நகைகளைத் திருடியதாக கடை ஊழியரான மேற்கு வங்க இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள டி.ஆர். நாயுடு தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவீன் (43). இவர், அப்பகுதியில் நகை பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பஷீர் உதீன் என்ற நவசுதீன் (26) பணியாற்றி வந்தார். அங்கு பாலிஷ் போடுவதற்காக 200 கிராம் தங்க நகைகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தனவாம். இதனிடையே, நவசுதீன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டார்.
பின்னர், அந்த நகைப் பெட்டியை பிரவீன் பார்த்தபோது, அதிலிருந்த நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்தனர். மும்பையில் உள்ள நகைக்கடையில் நவசுதீன் வேலை செய்து வருவதாக, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மத்திய பாகம் போலீசார் மும்பை சென்று அவரைக் கைது செய்து, தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 198 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
