» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகை பாலிஷ் போடும் கடையில் நகைகள் திருட்டு : மேற்கு வங்க இளைஞர் கைது

திங்கள் 15, ஜூலை 2024 8:12:36 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள நகை பாலிஷ் போடும் கடையில் 200 கிராம் நகைகளைத் திருடியதாக கடை ஊழியரான மேற்கு வங்க இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள டி.ஆர். நாயுடு தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவீன் (43). இவர், அப்பகுதியில் நகை பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பஷீர் உதீன் என்ற நவசுதீன் (26) பணியாற்றி வந்தார். அங்கு பாலிஷ் போடுவதற்காக 200 கிராம் தங்க நகைகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தனவாம். இதனிடையே, நவசுதீன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டார். 

பின்னர், அந்த நகைப் பெட்டியை பிரவீன் பார்த்தபோது, அதிலிருந்த நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்தனர். மும்பையில் உள்ள நகைக்கடையில் நவசுதீன் வேலை செய்து வருவதாக, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மத்திய பாகம் போலீசார் மும்பை சென்று அவரைக் கைது செய்து, தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 198 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education



Thoothukudi Business Directory