» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூறாவளிக் காற்றில் சாலையில் மரம் விழுந்து : போக்குவரத்து பாதிப்பு
திங்கள் 15, ஜூலை 2024 8:08:23 AM (IST)

ஆத்தூரில் சூறாவளிக் காற்றில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நேற்று சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஆத்தூர் அருகே நரசன்விளையில் அரசமரம் வேருடன் சாய்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனங்கள் முக்காணி ரவுண்டானா வழியாக ஏரல், குரும்பூர், நல்லூர், ஆறுமுகனேரிக்கு வந்தன. ஆறுமுகனேரியிலிருந்து சென்ற வாகனங்கள் நல்லூர், குரும்பூர், ஏரல் வழியாக முக்காணி ரவுண்டானா வந்து சென்றன. விடுமுறை நாள் என்பதால், திருச்செந்தூருக்கு தூத்துக்குடி வழியாக வாகனங்களில் வந்தோர் மாற்றுவழி காரணமாக அவதிக்குள்ளாகினர். அதிகாரிகள் வந்து ஒரு மணி நேரத்தில் மரத்தை அப்புறப்படுத்தியதையடுத்து, போக்குவரத்து சீரானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
