» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூறாவளிக் காற்றில் சாலையில் மரம் விழுந்து : போக்குவரத்து பாதிப்பு

திங்கள் 15, ஜூலை 2024 8:08:23 AM (IST)



ஆத்தூரில் சூறாவளிக் காற்றில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்,ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நேற்று சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஆத்தூர் அருகே நரசன்விளையில் அரசமரம் வேருடன் சாய்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனங்கள் முக்காணி ரவுண்டானா வழியாக ஏரல், குரும்பூர், நல்லூர், ஆறுமுகனேரிக்கு வந்தன. ஆறுமுகனேரியிலிருந்து சென்ற வாகனங்கள் நல்லூர், குரும்பூர், ஏரல் வழியாக முக்காணி ரவுண்டானா வந்து சென்றன. விடுமுறை நாள் என்பதால், திருச்செந்தூருக்கு தூத்துக்குடி வழியாக வாகனங்களில் வந்தோர் மாற்றுவழி காரணமாக அவதிக்குள்ளாகினர். அதிகாரிகள் வந்து ஒரு மணி நேரத்தில் மரத்தை அப்புறப்படுத்தியதையடுத்து, போக்குவரத்து சீரானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory