» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)
தூத்துக்குடியில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. புதுவிதமான தொண்டை வலி, காய்ச்சல், கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகளை தெரிவிக்கின்றனர். இதில் அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது சுகாதார துறை தற்போது காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் கள ஆய்வு நடத்த வேண்டும். மேலும், தூத்துக்குடியில் பெரிய பிரச்னையாக கொசுக்கள் தொல்லை உருவெடுத்திருக்கிறது. இதனால், தூங்காத கொசுக்கள் மக்களை தூங்க விடாமல் அச்சுறுத்துகின்றது.
தற்போது, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவலுக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. எனவே டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாக கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகர் பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)

அதுOct 3, 2023 - 02:18:04 PM | Posted IP 162.1*****