» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் 4½ஆண்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சனி 25, மார்ச் 2023 8:37:53 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு மற்றும் அவரது சகோதரர் சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் 2019ம் ஆண்டு முதல் 4½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரத்தில் கடந்த 22.02.2023 அன்று அய்யனடைப்பு சோரீஸ்புரத்தைச் சேர்ந்த பச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார் என்ற வழக்கறிஞரை அவரது நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து உடனடியாக சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வதற்கு தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரின் தம்பி சிவக்குமாரை கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் அருகில் வைத்து கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் ராஜேஷ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க விடாமலும், வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கோரம்பள்ளம் ராஜேஷ், பீட்டர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்துள்ளது தெரியவந்தது. 

இக்கொலை குற்ற செயலில் ஈடுபட்ட எதிரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஜெயப்பிரகாஷ் (34) என்பவர் கடந்த 12.03.2023 அன்று ராஜபிரபு எஸ்.ஐ மற்றும் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை எஸ்.ஐ கை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் பிரட்ரிக் ராஜன் தலைமையிலனா போலீசார் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு மற்றும் 2019ம் ஆண்டு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமாரின் உடன்பிறந்த சகோதரர் சிவக்குமாரை கொலை செய்த வழக்கிலும் 4½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியும், துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் என்பவரின் அண்ணனுமான கோரம்பள்ளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகேசன் (40) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory