» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தற்கொலை செய்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்!
சனி 25, மார்ச் 2023 4:54:51 PM (IST)
உடன்குடி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த சுடலைமாடன் என்பவர் விஷம் அருந்தி உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்தினரை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணத் தொகையினை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.