» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெபம்: சகோ. மோகன் சி. லாசரஸ் பிரசங்கம்!!
சனி 25, மார்ச் 2023 3:57:03 PM (IST)
நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் திறப்பின் வாசல் முகாம் இன்று சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் திறப்பின் வாசல் முகாம் நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் ஊழியக் குழுவினர் பாடல்கள் பாடினர்.
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் தேவ செய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.