» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

சனி 25, மார்ச் 2023 12:31:21 PM (IST)



நம்பிபுரம் பள்ளியில் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், எதிர் காலத்தில் எந்தவொரு ஆசிரியருக்கும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாத வகையில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு. லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். TESTE பொதுச்செயலாளர்,  AIPTF இணைப்பொதுசெயலாளர், மற்றும்  WTTF பொதுச்செயலாளர் ரெங்கராஜன் ஆர்ப்பாட்ட பேருரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் குமார், மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட,  வட்டாரப் பொறுப்பாளர்கள் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory